ஆபாச படம் பார்ப்பவர்கள் சென்னையில்தான் அதிகம் என்று அமெரிக்காவின் ஃஎப்பிஐ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிபு ஏடிஜிபி ரவி ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது, பகிர்வது எல்லாம் குற்றம், செல்போன், லேப்டாப்களில் ஆபாச படங்களை பார்க்கவோ, வைத்திருக்கவோ கூடாது என எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சகம் ஆபாச படங்களை பார்த்தவர்கள் ஐபி அட்ரஸ் அடங்கிய பட்டியல் ஒன்றை தற்போது தங்களிடம வழங்கியுள்ளதாகவும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பியவர்கள் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஏழு பேரின் பெயர்கள் வெளியாகி அவர்களது இருப்பிடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.