பொங்கல் பண்டிகை தொடக்கமான போகி பண்டிகை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன?... முன்னோர்கள் போகி பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் தெரியுமா?
போகி பண்டிகை
போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. அதாவது ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதிகளில் வரக் கூடியதாக இருக்கும். இந்தாண்டு 2020 ஜனவரி 14 (மார்கழி 29) செவ்வாய்க் கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதத்தின் கடைசி நாளே போகிப் பண்டிகையாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு சிறப்பாக போகி கொண்டாடப்படுகின்றது.